தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியர்களாக ஒன்றுபட்டு தீவிரவாதத்தை முறியடிப்போம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்

Advertisement

சென்னை: இந்தியர்களாய் ஒன்றுபட்டு தீவிரவாதத்தை முறியடிப்போம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.முஜீபுர் ரஹ்மான் நேற்று வெளியிட்ட அறிக்கை: போர் பதற்றம் அதிகரித்து வரும் இச்சூழலில் எல்லையில் காவல் காக்கும் நம் நாட்டு ராணுவ வீரர்களின் பணி மகத்தானது. அவர்களோடு இந்திய முஸ்லிம்கள் அனைவரும் துணை நிற்பார்கள். சுதந்திரத்திற்கு முன் நாட்டை காத்தது போல், தற்போதும் முஸ்லிம் ராணுவ வீரர்கள் உயிரை துச்சமாக மதித்து நாட்டிற்காக களத்தில் நிற்கிறார்கள்.

எனவே சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற போது ஆங்கிலேயனின் பக்கம் நின்றவர்கள் முஸ்லிம்களின் தேசப்பற்றை நிரூபிக்க சொல்வது வெட்க கேடு. நாடு இரண்டாக பிரிந்த நிலையில் எங்கள் வீடும் எங்கள் நாடும் இந்தியா தான் என்று உறுதியை வெளிப்படுத்தி இங்கேயே இருந்த முஸ்லிம்கள் இப்போதும் மாறாத அதே தேச பற்றுறுதியுடன் இருக்கின்றோம். பாகிஸ்தான் எல்லைமீறி தாக்குதல் தொடுத்தால் இந்திய மக்கள் அனைவரும் தான் பாதிக்கப்படுவோம். அத்தகைய நெருக்கடியான சூழலில் மததுவேஷத்திற்கு ஆட்படாமல் இந்தியர்களாய் ஒன்றுபடுவோம். தீவிரவாதத்தை முறியடிப்போம்.

Advertisement

Related News