இந்தியர்களாக ஒன்றுபட்டு தீவிரவாதத்தை முறியடிப்போம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்
Advertisement
எனவே சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற போது ஆங்கிலேயனின் பக்கம் நின்றவர்கள் முஸ்லிம்களின் தேசப்பற்றை நிரூபிக்க சொல்வது வெட்க கேடு. நாடு இரண்டாக பிரிந்த நிலையில் எங்கள் வீடும் எங்கள் நாடும் இந்தியா தான் என்று உறுதியை வெளிப்படுத்தி இங்கேயே இருந்த முஸ்லிம்கள் இப்போதும் மாறாத அதே தேச பற்றுறுதியுடன் இருக்கின்றோம். பாகிஸ்தான் எல்லைமீறி தாக்குதல் தொடுத்தால் இந்திய மக்கள் அனைவரும் தான் பாதிக்கப்படுவோம். அத்தகைய நெருக்கடியான சூழலில் மததுவேஷத்திற்கு ஆட்படாமல் இந்தியர்களாய் ஒன்றுபடுவோம். தீவிரவாதத்தை முறியடிப்போம்.
Advertisement