தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

68ம் ஆண்டு நினைவு நாள்: அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

Advertisement

சென்னை: அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கரின் 68வது நினைவு நாளை முன்னிட்டு ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்தார். இதில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம் உள்பட பலர் பங்கேற்றனர். பாஜ சார்பில் மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்பட பலர் மரியாதை செலுத்தினர். தைலாபுரம் தோட்டம் பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் அம்பேத்கர் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதஸங 0மரியாதை செலுத்தினார். துணைத் தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் மற்றும் நிரவாகிகள் கலந்து கொண்டனர்.

கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு பொதுச் செயலாளர் பிரேமலதா மரியாதை செலுத்தினார். துணை செயலாளர் பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். சமத்துவ கழக தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

Related News