தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சந்திரகிரி அடுத்த தொண்டவாடாவில் அமைக்கப்பட்டுள்ள லேஅவுட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை

Advertisement

*அமைச்சர் பேச்சு

திருப்பதி : சந்திரகிரி அடுத்த தொண்டவாடாவில் அமைக்கப்பட்டுள்ள லேஅவுட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேசினார்.

திருப்பதி மாவட்டம், சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட தொண்டவாடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லேஅவுட்டில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உள்கட்டமைப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில வீட்டு வசதி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் பார்த்தசாரதி, இணை கலெக்டர் சுபம் பன்சால், சந்திரகிரி எம்.எல்.ஏ புலிவார்த்தி நானி, பூதல பட்டு எம்.எல்.ஏ முரளி மோகன் மற்றும் வீட்டுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் பேசுகையில், ‘தொண்டவாடா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் லேஅவுட் பகுதியில் மின்சாரம், குடிநீர் மற்றும் சாலை கட்டுமானம் போன்ற உள்கட்டமைப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழை எளிய மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

அனைத்து லேஅவுட்களிலும் மின்சாரம், சாலைகள் மற்றும் வடிகால் போன்ற வசதிகள் மேற்கொள்வது குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு வீட்டுவசதி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்குள் அனைத்து பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என பேசினார் அதைத்தொடர்ந்து, சந்திரகிரி எம்.எல்.ஏ. நானி பேசுகையில், ‘மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்றி வருகின்றனர்.

சந்திரகிரியின் வளர்ச்சிக்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு மாநில அரசு செயல்பட்டு வருவது. மாநில அரசு தற்போது தகுதியான பயனாளிகளுக்கு ஓய்வூதியத்தை அளித்து வருகிறது. அரசு வழங்கிய ஆறு உத்திரவாதங்களை செயல்படுத்த மாநில அரசு செயல்பட்டு வருகிறது’ என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில வீட்டுவசதி கழகத்தின் தலைமை பொறியாளர் பிரசாத், திருப்பதி ஆர்.டி.ஓ ராம் மோகன், வீட்டுவசதி அதிகாரிகள் நிவாசராவ் பத்மநாபம் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement

Related News