காஷ்மீர்: காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலுக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்தர்கள் வரிசையில் நின்றபோது நடந்த சோதனையில் ஜோதி குப்தா என்பவரிடம் கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. ஜோதி குப்தா வைத்திருந்த துப்பாக்கி காலாவதியானது என்பது விசாரணையில் தெரியவந்தது. டெல்லி போலீசில் பணிபுரிவதாக கூறிய ஜோதி குப்தாவை காஷ்மீர் போலீசார் கைதுசெய்தனர்.
Advertisement

