சென்னை: அரசு பேருந்தை தாமதமாக இயக்கிய போக்குவரத்து அதிகாரிகளுக்கு ரூ.30,000 அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. நெல்லையில் இருந்து மதுரை பயணம் செய்த வழக்கறிஞர் பிரம்ம நாயகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோவில்பட்டி அரசு பணிமனையில் பயணிகளை பேருந்தில் வைத்துக் கொண்டே டீசல் நிரப்பியதாக புகார் தெரிவித்தார். மனுதாரருக்கு நஷ்டஈடாக ரூ.20,000மும் வழக்கு செலவுக்கு ரூ.10,000 வழங்க நெல்லை நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. நாகர்கோவில் கிளை மேலாளர், நிர்வாக இயக்குநர் சொந்த பணத்தில் இருந்து ஒரு மாதத்துக்குள் தர ஆணையிட்டது.
+
Advertisement


