பாட்னா : பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் பெட்டிகளை எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்-ஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக இரண்டுக்கும் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார். லோகோ பைலட் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் விபரீதம் ஏற்பட்டது. சுற்றி இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டதும் லோகோ பைலட் இறங்கி ஓடிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement


