திருவண்ணாமலை அம்மணி அம்மாள் மடத்தை புதுப்பிக்க உத்தரவிட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: இடிக்கப்பட்ட திருவண்ணாமலை அம்மணி அம்மாள் மடத்தை தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. மேலும் மடத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையில் தற்போதுள்ள நிலையை தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


