தொட்டபெட்டா காட்சிமுனையில் முகாமிட்டுள்ள காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத்துறை அனுமதி
நீலகிரி: தொட்டபெட்டா காட்சிமுனையில் முகாமிட்டுள்ள காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத்துறை அனுமதியளித்துள்ளது. குன்னூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு இருந்த காட்டு யானை தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு இடம் பெயர்ந்தது. குன்னூர் வன பகுதிக்கு விரட்ட முயன்றபோது காட்டு யானை உதகை நகருக்குள் புகுந்தது.


