Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சிறுமியை வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை!!

ஈரோடு : ஈரோட்டில் 9ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஜவுளி கடை ஊழியர் பாட்ஷாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த 2020ம் ஆண்டு கடத்தி சென்று, பள்ளிபாளையத்தில் திருமணம் செய்தார் பாட்ஷா. உடல்நல பாதிப்பால் சிறுமி அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரில் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் மைதீன் பாட்சாவை கைது செய்தனர்.