பெங்களூரு : தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ், தருண் ராஜு ஆகியோருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது எனவும் ரன்யா ராவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.


