மேலூர் அருகே கல்குவாரியில் மண்சரிந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
சென்னை: மேலூர் அருகே கல்குவாரியில் மண்சரிந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்த மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்துக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார்.


