Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுபான்மையினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு கடனுதவி வழங்குவதாக வதந்தி: உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்

சென்னை: சிறுபான்மையினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு கடனுதவி வழங்குவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அரசு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ரூ.30 லட்சம் வரை கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டுக்கழகம் மூலமாகவும் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை மறைத்துச் சிறுபான்மையினருக்கு மட்டும் அரசுக் கடன் வழங்குவதாகப் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்கள்.