லாரி ஏறி பள்ளி சிறுமி உயிரிழப்பு விவகாரம்: கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்
சென்னை: காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு அளித்துள்ளார். பெரம்பூரில் லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததை அடுத்து, நடவடிக்கையை துரிதப்படுத்த உத்தரவு அளித்துள்ளார்.
