இன்றைய மக்களவையில் ஆங்கிலம் (அ) தங்கள் தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் பேச்சு இந்தியில் மட்டுமே ஒளிபரப்பு: சு.வெங்கடேசன்
சென்னை: "இன்றைய மக்களவையில் ஆங்கிலம் அல்லது தங்களது தாய்மொழியில் பேசிய எம்.பி.க்களின் பேச்சுகளை சான்சட் டிவி அப்படியே ஒளிபரப்பாமல் ஹிந்தி மொழிமாற்றத்தை மட்டும் ஒளிபரப்பி தனது இந்தி திணிப்பு நடவடிக்கையை துவக்கியுள்ளது. இந்தி அல்லாத மொழிகளை பேசும் கோடிக்கணக்கான இந்தியர்களை அவமானப்படுத்திய செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும்." என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.



