குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 43 பேர் உயிரிழப்பு
குவைத்: குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். மங்கஃப் பகுதியில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த இருவர், தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பலியாகினர். கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கிய பலர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.


