மெரினா நீல கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது: சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை: மெரினா நீல கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையை இயற்கையான சூழலில் பொதுமக்கள் பயன்படுத்தவே நீல கொடி கடற்கரை திட்டம் உள்ளது. கோவளம் கடற்கரை பகுதி ஊராட்சிக்குள் வருவதால் பராமரிப்பு பணிகளுக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது


