சண்டிகர் : பஞ்சாபில் முடி வளர வைப்பதாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து சென்று சிகிச்சை பெற்ற 60க்கும் மேற்பட்டோர், கண் பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலவச முகாமிற்கு சென்று முடி வளரும் மருந்தை தடவிக் கொண்ட சிறிது நேரத்தில் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது; விசாரணையில் தலையில் தடவப்பட்ட மருந்தால் பக்க விளைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
Advertisement

