ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் விரிவாக்கத்தை வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர்
அரியலூர்: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் விரிவாக்கத்தை, அரியலூர் மாவட்டம் வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை சராசரி ஊட்டச்சத்து நிறையுடையவர்களாக உருவாக்கி தமிழ்நாட்டினை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக மாற்றுவதற்காக தொடங்கப்பட்டதே இத்திட்டம். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

