அமலாக்கத்துறை பதிவு செய்த பிஎம்எல்ஏ வழக்குகளில் எத்தனை வழக்குகள் முடிந்துள்ளன? உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: அமலாக்கத்துறை பதிவு செய்த பிஎம்எல்ஏ வழக்குகளில் எத்தனை வழக்குகள் முடிந்துள்ளன? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்த பணப்பரிவர்த்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் விரைவில் விசாரணையை தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


