Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2025-26ம் ஆண்டில் புதிதாக 12,000 பணியாளர்களை சேர்க்க உள்ளதாக விப்ரோ அறிவிப்பு..!!

பெங்களூர்: 2025-26ம் ஆண்டில் புதிதாக 12,000 பணியாளர்களை சேர்க்க உள்ளதாக தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ அறிவித்துள்ளது. 12,000 புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக விப்ரோ நிறுவன அதிகாரி சவுரப் கோவில் தகவல் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் கேம்பஸ் மூலம் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை 10,000ஐ எட்டும் என எதிர்பார்ப்பு. 3வது காலாண்டில் புதிதாக ஏற்கனவே 7,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அடுத்த காலாண்டில் கூடுதலாக 2,500 முதல் 3,000 வரை புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டம். ஒவ்வொரு காலாண்டிலும் 2,500 முதல் 3000 வரை புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.