டெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தி விசாரிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. Saket Gokhale கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றம் செல்வதற்கு அனைத்து உரிமைகளும் உறுப்பினருக்கு உள்ளது. இந்தியா கூட்டணி எம்.பி.க்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே நாடாளுமன்ற பாதுகாப்பு சிஐஎஸ்எஃப்-க்கு மாற்றப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
Advertisement

