தருமபுரி: நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 57,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பால் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. பரிசல் சவாரிக்கும், அருவியில் குளிக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது .
+
Advertisement


