Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

டெல்லி : டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நடப்பு ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிற்கான நிதி தேவைகள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் எடுத்துரைக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர்.