டெல்லியில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் ஆவடி நாசர்..!!
டெல்லி: டெல்லியில் உள்ள மதராசி கேம்ப் குடியிருப்பு அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழர் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் அமைச்சர் ஆவடி நாசர் தலா ரூ.8000 நிதியுதவி வழங்கினார். ரூ.4,000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு அமைச்சர் வழங்கினார்.


