மதுரை : உழவடை உரிமை சட்டப்படி வாரிசுதாரரை பதிவு செய்ய வட்டாட்சியர் அதிகாரம் படைத்தவர் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உழவடை உரிமை சட்டப்படி வாரிசுதாரர்களை பதிவுசெய்ய மறுத்த வட்டாட்சியரின் உத்தரவை ரத்துசெய்தது ஐகோர்ட். மதுரையைச் சேர்ந்த அம்சராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.


