கூட்டுறவு வங்கியில் Cibil Score அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம்.
கூட்டுறவு வங்கியில் Cibil Score அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர்
