ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் :தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை
சென்னை : ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை அளித்துள்ளது. ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

