மும்பை: மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சம்மனை ஏற்று ஆஜராகும் நபர்களின் வாக்குமூலத்தை பகலில் மட்டும் பதிவு செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஒருவரை சம்மன் அனுப்பி விசாரிப்பதற்கு முன் குறிப்பிட்ட நாளில் தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப இஷ்டம்போல் அமலாக்கத்துறை செயல்படுவதாக மும்பை ஐகோர்ட் கண்டித்திருந்தது.
Advertisement

