ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து நேற்று விநாடிக்கு 1329 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 5577 கன அடியாக அதிகரித்துள்ளது. 105 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 83.68 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. நீர் இருப்பு 17.71 டி.எம்.சி. ஆக உள்ளது. கால்வாய் மற்றும் ஆற்றின் வழியே விநாடிக்கு 855 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Advertisement

