மதுரை: மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அருப்புக்கோட்டை அருகே சாலையோரம் நின்ற மருத்துவ கியாஸ் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியின் பின்புறம் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், டேங்கரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. மருத்துவ ஆக்சிஜன் என்பதால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை தீயணைப்புத்துறையினர் தெளிவுபடுத்தினர்.
Advertisement
