நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் ஊட்டி மலை ரயில் 3 நாள் ரத்து
Advertisement
தொடர் கன மழையால் மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று (திங்கள்) முதல் வரும் 4ம் தேதி (புதன்) வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஊட்டி மலை ரயில் 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த தேதிகளில் முன்பதிவு செய்துள்ள சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Advertisement