தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருக்கழுக்குன்றத்தில் லட்சுமி தீர்த்த குளம் சீரமைப்பு பணிகள் துவங்கியது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ‘பட்சி தீர்த்தம்’ என்றழைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வர் மலைக்கோயில் உள்ளது. வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் அடிவாரத்திற்கு சற்று அருகாமையில் பக்தவச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் எதிரே அமைந்துள்ள, ‘லட்சுமி தீர்த்தம் குளம்’ மிகவும் பழமையான குளமாகும். இக்குளம் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பராமரிப்பு இல்லாததால் முட்புதர் மண்டிப்போய், விஷ ஜந்துக்களின் புகலிடமாக விளங்கியது. இந்நிலையில், பழமை வாய்ந்த இக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று பக்தர்களும்,

பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்ததின்பேரில் குளத்தை தூர் வாரி சுத்தம் செய்து, குளத்தின் கரையோரம் பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும் வகையிலான பணிகளை மேற்கொள்ள ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொண்ட திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் பணியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, பூங்கொடி கணேசன், திமுக நிர்வாகிகள் செங்குட்டுவன், சரவணன், இளங்கோ, அழகிரி, அகமது உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.