தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேலக்கோட்டையூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Advertisement

திருக்கழுக்குன்றம்: மேலக்கோட்டையூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் நோய் பரவும் அபாயம் ஏற்படுள்ளத. எனவே, இறந்த மிதக்கும் மீன்களை அகற்றி நோய் பரவுதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டையூர் ஊராட்சி பகுதியில் பெரிய ஏரி உள்ளது. சென்னையின் வளர்ந்து வரும் புறநகராக கருதப்படுகின்ற மேலக்கோட்டையூர் பகுதியில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புறங்களை சேர்ந்த முக்கிய அரசியல் வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பினர் இங்கு குடியேறி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு காவலர் குடியிருப்பும் இங்கு கட்டப்பட்டுள்ளது.

இந்த, காவலர் குடியிருப்பு மட்டுமின்றி, அங்குள்ளவர்கள் தங்களது வீட்டின் கழிவுகளை அருகிலுள்ள பெரிய ஏரியில் விடுகின்றனர். இதனால், ஏரியில் துர்நாற்றம் வீசி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் தற்போது கூடுதல் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் செல்பவர்கள் மூக்கை பிடித்தவாறே செல்ல வேண்டியுள்ளது.மேலும், இந்த ஏரியையொட்டி ஊராட்சிக்கு சொந்தமான 3 குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த, கிணற்று நீரைத்தான் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் உபயோகிப்பதால் வாந்தி, போதி ஏற்படுவதுடன், ஏரியில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் ஏரியில் செத்து மிதக்கிறது, குடிநீர் கிணறும் மாசுபடுகிறது. எனவே, அப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகின்ற ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News