இயக்குநர் பிரபுசாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி-2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட்!!
சென்னை: இயக்குநர் பிரபுசாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி-2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் 2012 ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்கி 2 படத்தை, பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ளார். நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கும்கி 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கும்கி 2 படத்தை தயாரிக்க, 2018 ம் ஆண்டு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்ற பிரபு சாலமன், கும்கி 2 படம் வெளியீட்டுக்கு பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவதாக ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 50 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல், நவம்பர் 14 ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.