தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பமேளா சென்று திரும்பிய போது விபத்து: பெண் எம்பியின் எலும்பு முறிவு

Advertisement

ராஞ்சி: கும்பமேளா சென்று திரும்பிய போது ஜார்கண்ட் பெண் எம்பி விபத்தில் சிக்கிய நிலையில் அவரது மணிக்கட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த மகன், மருமகள் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மாநிலங்களவை உறுப்பினர் மஹுவா மாஜி, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்ப மேளாவில் கலந்து கொண்டார். புனித நீராடிய அவர், தங்களது சொந்த ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவரது காரில், அவரது மகனும், மருமகளும் உடன் சென்றனர். காரை அவரது மகன் சோம்வித் மாஜி ஓட்டிச் சென்றார். இந்நிலையில் அந்த கார் ​​லதேஹர் சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கினார். அவ்வழியாக சென்றவர்கள் மூவரையும் மீட்டு ராஞ்சியில் இருக்கும் ஆர்க்கிட் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்தில் சிக்கிய மஹுவா மாஜியின் இடது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் அவரது விலா எலும்புகள் சேதமடைந்தன.

ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து நடந்தபோது அவரது மகனும் மருமகளும் காரில் இருந்தனர். மஹுவாவின் மகன் சோம்வித் மாஜி தான் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அதிகாலை 3:45 மணியளவில் காரை ஓட்டிச் சென்ற போது சோம்வித் மாஜி தூங்கிவிட்டதாகவும், பின்னர் என்ன நடந்தது என்றே அவருக்கு தெரியவில்லை. காருக்குள் சிக்கியிருந்த மூவரையும் அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Advertisement

Related News