குமரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது: 15 பேர் அடுத்தடுத்து புகாரால் பரபரப்பு
Advertisement
இந்நிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்பட்டது. நாகர்கோவில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சென்று ஆசிரியர் ராமச்சந்திர சோனியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. சகஜமாகதான் நடந்து கொண்டேன்’ என்றார். இருப்பினும் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக் சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ராமச்சந்திர சோனி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement