தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடுவாஞ்சேரி பெட்ரோல் பங்க் வாசலில் பீர்பாட்டில் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் படுகாயம்

Advertisement

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் வாசலில் பீர்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில், லாரி இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார். இதனால் லாரியில் இருந்த பீர்பாட்டில்கள் அனைத்தும் உடைந்து சிதறியதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து (49). லாரி டிரைவர்.

இவர், அம்மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் சேகரிகப்பட்ட காலி பீர்பாட்டில் மற்றும் மதுபாட்டில்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, நேற்றிரவு சென்னை பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தார். இன்று அதிகாலை கூடுவாஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையில் பிச்சைமுத்து லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது டிரைவர் பிச்சைமுத்துவின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை ஒட்டிய மின்வாரிய அலுவலகம் அருகே தனியார் பெட்ரோல் பங்க் நுழைவுவாயிலின் முன்பு தலைகுப்புற கவிழ்ந்தது.

இவ்விபத்தில் லாரிக்குள் இருந்த காலி பீர்பாட்டில் உள்பட அனைத்து மதுபாட்டில்களும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் சுக்குநூறாக உடைந்து சிதறியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன நெரிசல் ஏற்பட்டது. இவ்விபத்தில், லாரியின் இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் பிச்சைமுத்து படுகாயங்களுடன் அலறி கூச்சலிட்டார். படுகாயம் அடைந்த டிரைவர் பிச்சைமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்ததும் பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்த லாரியை கிரேன் உதவியால் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இவ்விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News