கோயம்பேடு மார்க்கெட்டில் கழிவறை கட்டணம் வசூலிக்க தடை: அரசுக்கு வியாபாரிகள் பாராட்டு
Advertisement
இதுசம்பந்தமாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள 68 கழிப்பிடங்கள் கட்டணமில்லாத கழிப்பிடமாக மாற்றப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தில் இனிமேல் கட்டணம் வசூலிப்பது தடை செய்யப்படுகிறது. விரைவில் கழிப்பிடத்தை வியாபாரியிடம் ஒப்படைத்து இலவசமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்காடி நிர்வாகத்துக்கு வியாபாரிகள் மற்றும் பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் நன்றி தெரிவித்தனர்.
Advertisement