தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில் கழிவறை கட்டணம் வசூலிக்க தடை: அரசுக்கு வியாபாரிகள் பாராட்டு

Advertisement

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. மார்க்கெட் முழுவதும் 94 கழிவறைகள் உள்ளன. காய்கறி, பூக்கள், பழம் மார்க்கெட்டில் 68 கழிவறைகள் மற்றும் 10 சிறுநீர் கழிப்பிடங்கள் உள்ளன. உணவு தானிய மார்க்கெட்டில் 26 கழிப்பிடங்கள் கட்டணமில்லாத கழிப்பிடங்களாக உள்ளன. ஆனால், காய்கறி, பழம் பூ மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடங்களில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் 10 மற்றும் 5 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கின்றனர். இதுதவிர குளிப்பதற்கு 30 ரூபாய் கட்டணம் வசூலித்து வருகின்றனர். கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் மட்டும் கட்டணமில்லாத கழிவறைகள் செயல்பட்டு வருகிறது. காய்கறிகள், பூக்கள், பழம் ஆகிய மார்க்கெட் வளாகத்திலும் கட்டணமில்லாத கழிப்பிடங்கள் செயல்பட வேண்டும்’’ வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுசம்பந்தமாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள 68 கழிப்பிடங்கள் கட்டணமில்லாத கழிப்பிடமாக மாற்றப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பிடத்தில் இனிமேல் கட்டணம் வசூலிப்பது தடை செய்யப்படுகிறது. விரைவில் கழிப்பிடத்தை வியாபாரியிடம் ஒப்படைத்து இலவசமாக பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்காடி நிர்வாகத்துக்கு வியாபாரிகள் மற்றும் பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் நன்றி தெரிவித்தனர்.

Advertisement

Related News