தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து .60 ஆயிரம் அபராதம் விதிப்பு

Advertisement

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுகளில் ஏராளமான மாடுகள் உலாவருவதால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். திடீரென வேகமாக மாடுகள் ஓடும்போது பொதுமக்கள் மீது மோதி காயம் அடைந்து வந்தனர். இதனால் அச்சுறுத்தலாக உள்ள மாடுகளை பிடிக்கவேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் புகார் கொடுத்து மார்க்கெட்டில் சுற்றிவரும் மாடுகளை பிடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அத்துடன் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதியை சந்தித்து புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேற்று மார்க்கெட்டில் ஆய்வு செய்தபோது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அங்காடி நிர்வாக ஊழியர்கள் 26 பேர் சென்று மார்க்கெட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து மாட்டின் உரிமையாளர்களை வர வைத்து பேசினர். பின்னர் அவர்களிடம் பேசி எச்சரிக்கை விடுத்ததுடன் 60 ஆயிரம் அபராதம் விதித்து மாடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். ‘’மாடுகள் மார்க்கெட் வளாகத்திற்குள் வராதபடி வீட்டில் கட்டிப்போட்டு பராமரிக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர்.

Advertisement

Related News