தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோத்தகிரியில் விதிமீறி வாகனம் ஓட்டிய உரிமையாளர்களுக்கு அபராதம்

*2வது கியரில் செல்ல அறிவுரை

Advertisement

கோத்தகிரி : கோத்தகிரியில் விதி மீறி வாகனம் ஓட்டிய உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மலைப்பாதையில் 2வது கியரில் செல்ல அறிவுரை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள், சந்திப்புகளில் போக்குவரத்து காவல்துறையினர் நீலகிரி எஸ்பி நிஷா அறிவுறுத்தலின்படி கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தீவிர வாகன சோதைனையில் ஈடுபட்டனர்.

டானிங்டன், கட்டபெட்டு, சக்கத்தா மாரியம்மன் கோவில், கன்னிமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.

மது அருந்தி வாகனங்களை இயக்குவது, லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, பின்னால் அமர்ந்தவரும் ஹெல்மெட் அணியாமல் செல்வது. அதிவேகம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இதில், கடந்த ஒரு வாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி வாகனங்களின் ஓட்நர்கள் உரிமம், தரச்சான்று ஆகியவை பரிசோதிக்கப்பட்டது.

மலைப்பாதையில் இரண்டாவது கியரில் வாகனங்களை இயக்கவும், மிகக்குறுகிய வளைவுகளில் ஒலி எழுப்பி குறைவான வேகத்தில் செல்லவும், வாகனங்களை முந்த கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த சோதனையின் போது கோத்தகிரி சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், காவலர் பரத் உள்ளிட்ட காவல் துறையினர் ஈடுபட்டனர்.

Advertisement

Related News