தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை; காற்றாடி, மாஞ்சா நூல் தயாரிப்பு:கொரட்டூரில் குடோனுக்கு சீல்: உரிமையாளர் கைது

Advertisement

அண்ணாநகர்: காற்றாடி, மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த குடோனுக்கு சீல் வைத்து உரிமையாளரை கைது செய்தனர். சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்துவரும் ரம்யா (25) என்பவர் அமைந்தகரை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 19ம்தேதி மாலை பணிக்கு செல்வதற்காக அமைந்தகரை ஸ்கை வாக் மேம்பாலத்தின் மீது மொபட்டில் சென்றபோது பறந்துவந்த காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து படுகாயம் அடைந்த ரம்யாவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அவர் குணமாகி வீடு திரும்பினார்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி அமைந்தகரை பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம்(42) கைது செய்தனர். பின்னர் அவரது கடையில் சோதனை நடத்தி விற்பனைக்கு வைத்திருந்த காற்றாடி, மாஞ்சா நூல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், அண்ணாநகர் உதவி ஆணையர் முனுசாமி தலைமையில் தனிப்படை அமைத்து காற்றாடி, மாஞ்சா நூல் தயாரிக்கும் கும்பல் பற்றி விசாரித்தனர். இதில் கொரட்டூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் காற்றாடி, மாஞ்சா நூல் தயார்செய்து கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது.

இதையடுத்து நேற்றிரவு தனிப்படை போலீசார் சென்று கொரட்டூர் வெங்கட்ராமன் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(48) என்பவரை கைது செய்து அவரது குடோனில் சோதனை நடத்தி அங்கு பதுக்கிவைத்திருந்த காற்றாடி,மாஞ்சா நூல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் ரமேஷை, அண்ணாநகர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இவர், அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், திருமங்கலம், முகப்பேர், சூளைமேடு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்துள்ளார் என்று தெரியவந்துளள்ளது. இதையடுத்து குடோனுக்கு சீல் வைத்தனர்.

Advertisement

Related News