Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கொரடாச்சேரி அருகே கருங்கல்லாலான 2 சிவலிங்கம், 2 நந்தி சிலைகள் கிடைத்தது

*திருவாரூர் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே காட்டாற்றில் கருங்கல்லால் ஆன இரண்டு சிவலிங்கமும் இரண்டு நந்தியும் கிடைக்கப்பெற்றது.

திருவாரூர் மன்னார்குடி சாலையில் கொரடாச்சேரி ஒன்றியம் குழிக்கரை சார்வன் பகுதிக்கு செல்லும் சாலையை ஒட்டி உள்ள காட்டாற்று பாலம் என்ற கிராமத்தில் காட்டாற்றில் மணல் பகுதியில் சுமார் ஒரு அடி உயரமுள்ள இரண்டு சிவலிங்க சிலைகளும்.

ஒரு அடி மற்றும் அரை அடி உயரமுள்ள இரண்டு நந்தி சிலைகளும் கிடந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் அருணா தேவி மற்றும் திருவாரூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த தாசில்தார் செல்வகுமார் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கருங்கல்லானா நான்கு சிலைகளையும் கைப்பற்றி திருவாரூர் தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.