தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்கத்தா - குஜராத் இடையிலான ஏப்.6 ஐபிஎல் போட்டி வேறு நாளுக்கு மாற்றம்? ராம நவமி கொண்டாட்ட தினம்

Advertisement

கொல்கத்தா: ஐபிஎல் தொடருக்காக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே வரும் ஏப். 6ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போட்டி வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 போட்டித் தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் துவங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வரும் ஏப் 6ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நாள் ராம நவமி தினமாக இருப்பதால், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 20,000 ஊர்வலங்கள் நடத்தப்படும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சிகளின்போது கொல்கத்தாவில் ஐபிஎல் போட்டி நடத்தினால், அதற்காக திரண்டு வரும் 65,000 ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்னேஹாஸிஸ் கங்குலி கூறுகையில், ‘ராம நவமி தினத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என போலீஸார் திட்டவட்டமாக கூறியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு இன்றி, 65,000 ரசிகர்கள் பங்கேற்கும் போட்டியை நடத்துவது இயலாத காரியம். இதுகுறித்து, பிசிசிஐக்கு தெரிவித்துள்ளோம். எனவே, போட்டி வேறு தேதிக்கு மாற்றப்படும் சூழ்நிலை உள்ளது. கடந்த ஆண்டும் இதே போன்று தேதி மாற்றப்பட்டுள்ளது’ என்றார்.

Advertisement

Related News