கொல்கத்தா - குஜராத் இடையிலான ஏப்.6 ஐபிஎல் போட்டி வேறு நாளுக்கு மாற்றம்? ராம நவமி கொண்டாட்ட தினம்
Advertisement
முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சிகளின்போது கொல்கத்தாவில் ஐபிஎல் போட்டி நடத்தினால், அதற்காக திரண்டு வரும் 65,000 ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்னேஹாஸிஸ் கங்குலி கூறுகையில், ‘ராம நவமி தினத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என போலீஸார் திட்டவட்டமாக கூறியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு இன்றி, 65,000 ரசிகர்கள் பங்கேற்கும் போட்டியை நடத்துவது இயலாத காரியம். இதுகுறித்து, பிசிசிஐக்கு தெரிவித்துள்ளோம். எனவே, போட்டி வேறு தேதிக்கு மாற்றப்படும் சூழ்நிலை உள்ளது. கடந்த ஆண்டும் இதே போன்று தேதி மாற்றப்பட்டுள்ளது’ என்றார்.
Advertisement