Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கே.எல்.ராகுல் பழைய பார்முக்கு திரும்புவார்: பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நம்பிக்கை

கான்பூர்: இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 2வது டெஸ்ட் கான்பூரில் இன்று தொடங்கியது. இதனிடையே அணியின் பேட்டிங் ஆர்டரில் கே.எல்.ராகுலின் இடம் மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு முன்பாக 5வது இடத்தில் ரிஷப்பன்ட் களம் இறக்கப்படுகிறார். மோசமான பார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் தனது இடத்திற்கு போட்டி கடுமையாக இருப்பதால் அதனை தக்க வைத்துக்கொள்ள ரன் குவிக்கவேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

இதுபற்றி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர்அளித்துள்ள பேட்டி: “நீங்கள் இந்திய அணிக்காக விளையாடும்போது தனியாக உங்களுக்கு ஒரு உத்வேகம் தேவைப்படாது. சில சமயங்களில் உங்களுக்கு ஒரு திசை காட்டுவது மட்டுமே தேவையாக இருக்கும். நான் கேஎல்.ராகுலுக்கு இது தேவை என்று நினைக்கிறேன். மேலும் கடந்த சில நாட்களாக நான் அவருடன் இருந்ததில் அவர் எதையும் புரிந்து கொள்ளக் கூடியவர் என்று உணர்கிறேன். ஒரு வீரர் தனக்கானதை கண்டுபிடிக்கும் நேரங்கள் இருக்கின்றன.

கே.எல்.ராகுல் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணிக்காக சிறந்த முறையில் பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். நான் மற்றும் கம்பீரும் சேர்ந்து, கே.எல்.ராகுலுக்காக ஒரு திருப்புமுனையை உண்டாக்க முடியும் என்று நிச்சயம் நம்புகிறேன். வங்கதேச அணிக்கு எதிராக முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்த விதம் நாங்கள் விரும்பியதுபோல இருந்தது. அவருக்கு நாங்கள் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய நிறைய வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவரது அணுகுமுறை சிறப்பாக அமைந்திருந்தது. அவரிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் அவருடைய பர்பாமன்ஸ் உடன் ஒத்துப் போகும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.