தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் 6 மாணவிகளிடம் சில்மிஷம்: நடன ஆசிரியர் மீது போக்சோவில் வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் நடன பயிற்சி அளிக்கும்போது மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட புகாரில் பிரசித்தி பெற்ற கலாமண்டலம் நடன ஆசிரியர் கனககுமார் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் பிரசித்தி பெற்ற கலாமண்டலம் நடன மையம் உள்ளது. இங்கு பரதநாட்டியம், கதகளி, திருவாதிரை உள்பட பாரம்பரிய நடன கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆகவே இந்த மையம் சர்வதேச அளவில் புகழ்பெற்றதாகும்.

Advertisement

இந்தியாவில் பல பிரபல நடன கலைஞர்கள் இங்கு நடனம் பயின்றுள்ளனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் நடனம் கற்பதற்காக வருகின்றனர். இங்கு கூடியாட்டம் என்ற கேரள பாரம்பரிய நடனத்தை பயிற்றுவிக்கும் கனககுமார் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நடன பயிற்சி அளிக்கும்போது தங்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக கூறி 6 மாணவிகள் கலாமண்டலம் துணைவேந்தரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரை துணைவேந்தர் செருதுருத்தி போலீசுக்கு அனுப்பி வைத்தார். கனககுமார் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News