தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள தனியார் வங்கியில் ‘கவரிங்’ வைத்து 575 சவரன் சுருட்டிய மேலாளர் கைது: திருப்பூரில் அடமானம் வைத்த நகைகள் மீட்பு: ஒருவருக்கு வலை

Advertisement

திருப்பூர்: கேரளாவில் தனியார் வங்கியில் கவரிங் வைத்து 575 சவரன் நகையை சுருட்டிய மேலாளர் கைது செய்யப்பட்டார். திருப்பூரில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை கேரள போலீசார் மீட்டனர்.

திருச்சி மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதா ஜெயக்குமார் (34). இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் எர்ணாகுளத்தில் உள்ள பலாரிவடம் கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த கிளைக்கு சென்று மதா ஜெயக்குமார் மேலாளராக பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், வடகரை வங்கி கிளையில் வங்கி அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் போலி (கவரிங்) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், கேரளா மாநிலம் வடகரை போலீசார் வழக்குப்பதிந்து மதா ஜெயக்குமாரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 4.60 கிலோ எடையுடைய சுமார் 575 பவுன் நகைகளை திருப்பூரை சேர்ந்த தனது நண்பரான தனியார் வங்கி பணியாளர் கார்த்தி உதவியுடன் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள தனியார் வங்கியில் 17 நபர்களின் பெயரில் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து கேரள போலீசார் மதா ஜெயக்குமாரை திருப்பூர் தனியார் வங்கிக்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அந்த வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 4.60 கிலோ தங்க நகைகளையும் மீட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூர் தனியார் வங்கி பணியாளர் கார்த்திக் தலைமறைவாக உள்ளார். அவரை கேரள போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News