தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கெஜ்ரிவால் முதல்வராகும் வரையில் பரதன் போன்று ஆட்சி செய்வேன்: டெல்லி முதல்வர் அடிசி சபதம்

 

Advertisement

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக அடிசி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த 21ம் தேதி தலைநகர் டெல்லியில் 8வது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதேபோன்று அவரது அமைச்சரவையில் புதியதாக ஐந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக அடிசி நேற்று காலை டெல்லி தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த போது அவர் அமர்ந்திருந்த இருக்கையில் உட்காராமல் வழக்கமாக அமைச்சர்கள் அமரும் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்தார்.

இருப்பினும் அதேநேரத்தில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இருக்கையினையும் தனது இருக்கைக்கு அருகிலே வைத்து கொண்டார். தொடர்ந்து அடிசி கூறியதில், இராமாயணத்தில் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற போது அவரது காலணியை வைத்து பரதன் ஆட்சி செய்தார். அதேபோன்று அடுத்த நான்கு மாதங்கள் நானும் டெல்லி ஆட்சியை நடத்த உள்ளேன். டெல்லி முதலமைச்சர் பதவி என்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமானதாகும். அவர் மீண்டும் முதல்வர் பொறுப்புக்கு திரும்பும் வரையில் காத்திருப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Related News