தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கதிர்வேடு நகர் பகுதிகளுக்கு தனியாக கிராம நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

Advertisement

புழல்: புழல் அடுத்து கதிர்வேடு நகர் பகுதிகளுக்கு தனியாக கிராம நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாதவரம் மண்டலம் 31வது வார்டில் புழல் அடுத்த கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா நகர், மதுரா மேட்டுப்பாளையம், கலெக்டர் நகர், மகாலட்சுமி நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர், பத்மாவதி நகர், பிரிட்டானியா நகர், மூர்த்தி நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகள் உள்ளன.

மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள், பல்வேறு அரசு சம்பந்தமான சான்றிதழ் வாங்க குறிப்பாக சாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க 3 கிமீ தூரம் உள்ள சூரப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்று மனு கொடுத்துவிட்டு வருகின்றனர். இதனால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, இதற்கு முன்பு கதிர்வேடு மற்றும் சூரப்பட்டு ஊராட்சியாக இருந்தபோது, மக்கள் தொகை குறைந்த அளவு இருந்ததால், இரண்டு ஊராட்சிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு கிராம நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு, சூரப்பட்டு கிராமத்தில் இதுநாள் வரை செயல்பட்டு வருகிறது.

தற்போது, புழல் அடுத்த கதிர்வேடு 31வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் தொகை அதிகளவில் உள்ளதால், கதிர்வேடு பகுதிக்கு குறிப்பாக 31வது வார்டுக்கு தனியாக கிராம நிர்வாக அதிகாரி நியமித்து, கதிர்வேடு பகுதியிலேயே செயல்படுத்த வேண்டுமென கதிர்வேடு கிராமம் மற்றும் பல்வேறு நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள், வார்டு கவுன்சிலர் சங்கீதாபாபுவை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர், வருவாய்த்துறையினர் ஆகியோருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisement

Related News