தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீரில் மேய்ச்சலுக்கு சென்றவர்களை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் கொலை : கிராம பாதுகாப்புக் குழுவுக்கு இது பாடமாக இருக்கட்டும் என எச்சரித்து கடிதம்!!

Advertisement

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கிராம பாதுகாவலர்கள் 2 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள ஒஹ்லி குன்ட்வாரா கிராம பாதுகாவலர்களான நஷிர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகிய 2 பேரை தீவிரவாதிகள் கொன்றனர். இருவரும் வழக்கம் போல கால்நடைகளை மேய்ப்பதற்காக வனப்பகுதிக்கு சென்று இருந்த போது, பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவர்கள் உடல்களுக்கு அருகில் உருது மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்ததாகவும் அதில் கொலைக்கு பொறுப்பேற்பதாக ஜெய்ஷ்-இ -முகமது பயங்கரவாத இயக்கத்தின் கிளையான காஷ்மீர் டைகர்ஸ் என குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தினர் மட்டுமே தங்கள் இலக்கு என்றும் பொது மக்களை இதுவரை கொன்றதில்லை என குறிப்பிட்டுள்ள அந்த கடிதத்தில், வனப்பகுதியில் தங்களை விடாமல் துரத்தியதாலயே சிறைபிடித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம பாதுகாப்பு குழுவில் இணைபவர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, கிராமப் பாதுகாவலர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துணைநிலை கவர்னர் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் காங்கிரஸ், பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News