தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்!.. பலியானவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்: கீ.வீரமணி

Advertisement

சென்னை: காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்!. பலியானவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்.

காஷ்மீர் பகுதியில் சற்றும் எதிர்பாராமல் நடைபெற்ற தீவிரவாதக் கும்பலின் திடீர் தாக்குதல் முறையற்றது; மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது; சுற்றுலா சென்ற பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முற்றிலும் கோழைத்தனமானது.இதனை ஒன்றிய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும்.

கருநாடகத் தொழிலதிபர் உள்பட இந்தியர்கள், வெளிநாட்டவர் என சுற்றுலாவிற்குச் சென்றவர்களின் நிலை இப்படியா ஆவது? தமிழ்நாட்டவர் காயமாக்கப்பட்டுள்ளனர். ஈவு இரக்கமற்ற மக்கள் விரோதக் கும்பலின் இம்மாதிரிக் கொடூரமான செயல் – இதுவே கடைசி முறையாக அமைய வேண்டும். உயிர் இழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் கட்சி, அரசியல், எந்த வேறுபாடும் இன்றி ஒருங்கிணைந்து கண்டனக் குரல் எழுப்பிட வேண்டும்.

மனித உயிர்களுக்கு இப்படியா ஒரு நிலை ஏற்படுவது? இது வெட்ககரமானது, வேதனையானது!. இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News